internet

img

ஹூவாய் ஃபோன்களுக்கான புதிய இயங்குதளம் விரைவில் அறிமுகம்!

ஹூவாய் ஃபோன் மற்றும் லேப்டாப்களுக்கான புதிய இயங்குதளத்தை, அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஹூவாய் நிறுவனத்திற்கு, அமெரிக்கா விதித்த தடையால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்து கொண்டுள்ளன. முதலில், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தது, பின்னர் ஜெர்மன் சிப்மேக்கர் இன்ஃபினியான் நிறுவனமும் ஹூவாயுடன் வர்த்தகத்தை நிறுத்திவிட்டது. இதை அடுத்து, ஆர்ம் ஊழியர்களுக்கும் வர்த்தகத்தை நிறுத்தி கொள்ளும்படி அமெரிக்கா அறிவுறுத்தியது. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனமும், அதன் கடைகளில் இருந்து ஹூவாய் லேப்டாப்களை திரும்ப பெற்றது. இதை தொடர்ந்து, இன்டெல், குவால்காம் மற்றும் எஸ்டி அசோசியேஷன் ஆகிய நிறுவனங்களும் தங்கள் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டன. 

இந்நிலையில், ஹூவாய் நிறுவனம் அதன் ஃபோன் மற்றும் லேப்டாப்களுக்கான புதிய இயங்குதளத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றிய  அறிவுசார் சொத்துrரிமை அலுவலகத்தில் ஹூவாய் ஆர்க் ஓஎஸ், ஹூவாய் ஆர்க், ஆர்க் மற்றும் ஆர்க் ஓஎஸ் ஆகிய பெயர்களை, கடந்த 24-ஆம் தேதி அன்று முத்திரை இடப்பட்டுள்ளதாகவும் ஆண்ட்ராய்டு ஹெட்லைன் தெரிவித்துள்ளது. ஆனால் ஹூவாய் நிறுவனம், இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.